மீனாட்சியம்மன் கோயிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் !

சபரிமலை சீசனை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-12-25 12:14 GMT

சபரிமலை சீசனை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை எப்போதும் குறைவதில்லை. இதற்கிடையே தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை காரணமாக கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கிடையே தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிக அளவில் மீனாட்சியை தரிசிக்க வந்துகொண்டு இருக்கின்றனர். இதனால் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.

இதன் எதிரொலியாக, அம்மன் மற்றும் சுவாமியை நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் தரிசனம் செய்தனர். மேலும், கோயில் வளாகத்தின் அருகேயுள்ள சித்திரை வீதிகளில் இருக்கும் நகை, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் காலியாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பிரசாத ஸ்டால்களில் லட்டு, அப்பம், முருக்கு மற்றும் பொங்கல், புளியோதரை உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையானது.இதற்கிடையே பக்தர்கள் வருகை அதிகரிப்பால் கோயில் இன்ஸ்பெக்டர் கீதா நாச்சியார் தலைமையில் போலீசார் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருந்தனர்.

Tags:    

Similar News