விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம்

Update: 2024-01-06 15:00 GMT

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் வருகின்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் பொறுப்பாளர்கள் நியமிப்பது சம்மந்தமாகவும் கட்சியின் கொள்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க அனைவரும் உழைக்க வேண்டும் என்றும்,வருகின்ற காலங்களில் பல்வேறு இடங்களில் கட்சிக்கொடியினை ஏற்றி கட்சியை வலுப்படுத்தவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கு அவர்களுக்கு கீழ் அனைத்து கிளையிலும் கழக நிர்வாகிகளை நியமித்து கட்சிப் பணியினை செய்ய வேண்டும் என்றும், அதன் மூலம் கட்சியின் கொள்கைகளை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News