பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏல மார்கெட்டில் வாழை விலை உயர்வு.

பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏல மார்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-05-30 07:11 GMT

விற்பனைக்கு வந்த வாழைத்தார்  

பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பொத்தனூர், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம்‌ குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வாழைத்தார்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தார் ஏல சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு ஏலம் எடுக்கப்படும் வாழைத்தார்களை வியாபாரிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.300- ‌க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.275- க்கும், ரஸ்தாளி ரூ.250-  க்கும், கற்பூரவள்ளி ரூ.250- க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4 - க்கும், செவ்வாழை காய் ஒன்று ரூ. 7- க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.350 க்கும், பச்சைநாடன் தார் ரூ.325 க்கும், ரஸ்தாளி தார் ரூ.350 க்கும், கற்பூரவள்ளி தார் ரூ.300 க்கும்,மொந்தன் ஒரு காய் ரூ.6 க்கும், செவ்வாழை காய் ஒன்று ரூ. 10 -க்கும் ஏலம்போனது.

Tags:    

Similar News