உடல் நலக்குறைவால் வங்கி ஊழியர் பலி
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் வங்கி ஊழியர் திடீர் உடல்நல குறைவால் பலியானர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Update: 2024-01-22 10:45 GMT
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிஜய்குமார் பராக்கர் (வயது38). இவர் தனது மனைவி கனாப்பாரதி (32) என்பவருடன் சேலம் அஸ்தம்பட்டி இட்டேரி ரோடு சுப்பராயன் நிலையம் பகுதியில் தங்கி இருந்து சேலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிஜய்குமார் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிஜய்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.