தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஒய் ரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-10 06:44 GMT

லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது

திருச்சி மாவட்டம் ,நம்பர் 1 டோல்கேட் பகுதியில் கொள்ளிடம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நம்பர் 1 டோல்கேட் ஒய் ரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.

அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி வடக்குத் தெருவை சேர்ந்த 44 வயதான விஜயகுமார் என தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News