சிவாஜி திரையரங்கில் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்குதல்!

வாணியம்பாடியில் சிவாஜி திரையரங்கில் தின்பண்டம் வாங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

Update: 2024-05-14 13:07 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சிவாஜி திரையரங்கில் தின்பண்டம் வாங்குவதில் இளைஞர்கள் மற்றும் திரையரங்க ஊழியர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் அமைந்துள்ளது சிவாஜி திரையரங்கம் இந்த திரையரங்கத்திற்கு திரைப்படம் பார்ப்பதற்காக வந்த இளைஞர்கள் சிலர் திரையரங்க வளாகத்தில் தின்பண்டம் வாங்குவதற்காக சென்றபோது அங்கு திரையரங்கத்தில் டோக்கன் விநியோகம் செய்யும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திரையரங்கத்தில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி உள்ளது.. இதில் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வரும் நிலையில், இது குறித்து காவல் நிலையத்திற்கு திரையரங்கு ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் தரப்பில் புகார் வராததால் காவல்துறையினர் இதை குறித்து விசாரணை எதுவும் செய்யவில்லை என தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News