பெண்களின் வெற்றிக்கு பின்னால் ஆண்கள் உள்ளனர் - நயன்தாரா

பெண்களின் வெற்றிக்கு பின்னால் ஆண்கள் உள்ளனர் என சங்ககிரியில் நடந்த விழாவில் நடிகை நயன்தாரா பேசினார்.

Update: 2024-01-10 13:07 GMT

சேலம் சங்ககிரியில் பெமி 9 என்ற நிறுவனத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் இந்த நிறுவனத்தின்  உரிமையாளர்கள் பிரபல சினிமா திரைப்பட நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ்சிவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் உள்ள விற்பனையாளர்கள் பங்கேற்றனர். குறிப்பாக அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக நினைவு பரிசுகளை நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ்சிவன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இதில் பிரபல சினிமா திரைப்பட நடிகை நயன்தாரா சிறப்புரையாற்றினார் அப்போது சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் எனவும் பெண்கள் நல்லா இருந்தா சொசைட்டியே நல்லா இருக்கும் எனவும் தெரிவித்தார்.மேலும் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உள்ளது போல; சாதித்த பெண்களுக்கும், ரொம்ப மகிழ்ச்சியாக உள்ள பெண்களுக்கும் பின்னாலும் கண்டிப்பா ஒரு ஆண் உள்ளார் என்ற அவர் எனக்கு பின்னால் எனது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளார், அவரை சந்தித்து முதலே எனக்கு துணையாகவே உள்ளார் என்றார்.இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசுகையில், சானிட்டரி நாப்கின் தொடர்பாக பேசும் போதெல்லாம் காமெடியாக எண்ணிக்கொண்டிருந்து.இது குறித்து தெரிந்த பின்னர் விழிப்புணர்வு ஏற்படுத்த வருவதாக கூறினார். மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோபமாக இருப்பார்கள் என்று கூறுவார்கள் அப்பொழுது எவ்வாறு அது சாத்தியம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தற்போது தனது மனைவி நயன்தாரா மாதாவிடாய் காலங்களில் ஆக்ரோஷமாக இருப்பார் அப்போதுதான் உண்மை என்று தெரியவந்தது என்று காமெடியாக பேசினார்.முன்னதாக நயன்தாராவை காண மிகுந்த ஆவலோடு வந்திருந்த கல்லூரி மாணவிகளுடன் அவர் செல்பி எடுத்துக் கொண்டார்.

Tags:    

Similar News