பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா: அன்னதானம்

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.

Update: 2024-05-09 03:54 GMT

 தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. 

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 30ம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று செவ்வாய்கிழமை காலை அபிஷேகபூஜை, அலங்கார பூஜையுடன் மதியக் கொடை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

கொடைவிழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராஜாபெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, காரியதரிசி முனியசாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், உட்பட பலர் செய்திருந்தனர்.  

Tags:    

Similar News