அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் பஜனை நிகழ்ச்சி
அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-04-15 01:54 GMT
பஜனை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி பகுதியில் உள்ள கீழ மரத்தோணியில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அங்காள ஈஸ்வரி அம்மனக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீப ஆராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து சங்கரன்கோவில் சைவ சித்தாந்த பேரவை அடியார்கள் வழங்கும் திருமுறை பாராயணம் மற்றும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.