நெல்லையப்பர் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி

நெல்லையப்பர் கோவிலில் வசந்த திருவிழாவை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-04-29 09:33 GMT

நெல்லையப்பர் கோவிலில் வசந்த திருவிழாவை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. 

திருநெல்வேலி மாவட்டம் டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் வசந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று (ஏப்.28) இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாணவிகளின் பரத நாட்டியத்தை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

Tags:    

Similar News