வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக நடத்தப்பட்ட பூமி பூஜையில் எம்எல்ஏ பங்கேற்றார்.

Update: 2024-03-08 11:35 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவாத்தூர், நேத்தாப்பாக்கம், வேட்டூர், மேல்சிலாவட்டம் பகுதி கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அந்தந்த பகுதியில் நியாயவிலை கடை, சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்களிடம் மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 7 இலட்சம் நிதி ஒதுக்கி நேத்தாப்பாக்கம் ஊராட்சி புளிக்கொராடு பகுதியில் பகுதிநேர நியாயவிலை கடையை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் திறந்து வைத்து, ரூபாய் 30.25 இலட்சம் மதிப்பீட்டில் தேவாத்தூர் பகுதியில் முழுநேர நியாயவிலை கடை, சாலையூர் பகுதியில் சிமெண்ட் சாலை, மேலசிலாவட்டம் பகுதியில் பகுதிநேர நியாய விலை கடை, அமைக்கும் பணி மேற்கொள்ள அதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News