அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலக கட்டட பூமி பூஜை
ஓசூரில் ரூ. 12 லட்சம் மதிப்பில் அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில், எம்.எல்.ஏ., பிரகாஷ் பங்கேற்றார்.;
Update: 2024-02-13 03:55 GMT
ஓசூரில் ரூ. 12 லட்சம் மதிப்பில் அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில், எம்.எல்.ஏ., பிரகாஷ் பங்கேற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓசூர் மாநகராட்சி GRT அருகில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் காமாட்சிஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் ₹12 இலட்சம் மதிப்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒசூர் எம். எல். ஏ ஒய். பரகாஷ் கலந்துக்கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்