கலைஞர் நூற்றாண்டு வளைவு அமைக்க பூமி பூஜை

கலைஞர் நூற்றாண்டு வளைவு அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது.

Update: 2023-11-29 15:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம், நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 74 லட்சம் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது விரிவாக்க பணிகள் நிறைவடைந்த நிலையில், பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு வளைவு மற்றும் பயணியர் நிழற்குடை கட்ட எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது,அந்தப் பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா,

திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, நகர அவைத்தலைவர் சாகுல் அமீது, துணைச் செயலாளர் செந்தில்குமார். பொருளாளர் தமிழரசன், நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News