பைக் - லாரி நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

முத்தூர் அருகே பைக் - லாரி நேருக்கு நேர் மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2024-05-07 14:56 GMT

காவல் நிலையம்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், முத்தூர் அருகே மலையாளத்தான் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் பாலகிருஷ்ணன் வயது 50. இவர் மே 5-ம் தேதி இரவு 7:30- மணி அளவில், கொடுமுடியில் இருந்து முத்தூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் சலயன் காட்டுப்பள்ளம் அருகே வந்த போது, எதிர் திசையில் சேலம் மாவட்டம், ஆத்தூர், கலகம்பாடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சிதம்பரம் வயது 24 என்ற இளைஞர் ஓட்டி வந்த அசோக் லேலண்ட் லாரி, பாலகிருஷ்ணன் ஒட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணனுக்கு தலை, வலது மற்றும் இடது புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலகிருஷ்ணன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த பாலகிருஷ்ணனின் மனைவி சுதா வயது 39 என்பவர், காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.

Tags:    

Similar News