கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் - 6 பேர் மீது வழக்கு
பள்ளப்பட்டி பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில் இருதரப்பினர் மோதல் - 6 பேர் மீது வழக்கு;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 07:15 GMT
கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் - 6 பேர் மீது வழக்கு
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும், 18 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது. இதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பை சேர்ந்த பிரவீன், பாண்டியன், மணி, திவாகர் மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.