முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்; துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி

முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூரில் துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி திமுக.,வினர் கொண்டாடினர்.

Update: 2024-03-01 10:47 GMT

தமிழக முதலமைச்சர் பிறந்த நாள்- துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி- பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த திமுகவினர். தமிழக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக, கரூரை அடுத்த வெங்கமேடு, வாட்டர் டேங்க் அருகில் கட்சியின் இளைஞரணி துணை அமைப்பாளர் நித்தியானந்தம் தலைமையில் துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி பாக்கெட்டுகளும், பொது மக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா,கரூர் வடக்கு நகர செயலாளர் கணேசன்,மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ்,கோல்ட் ஸ்பாட் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News