வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கரும்புகை: அலறிய பயணிகள்...!

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கரும்புகை வந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டினர்.

Update: 2024-01-07 09:30 GMT
வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கரும்புகை... அலறிய பயணிகள்

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டு சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட கரும்புகையால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த செங்கல்பட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் டி1 பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் சார்ஜ் போட்டபோது கரும்புகை வெளியேறியது.

இதனால் அச்சமடைந்த பயணிகள் சம்பவம் குறித்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு கரும்புகையானது அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 10 நிமிட காலதாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

Tags:    

Similar News