அரசு பள்ளியில் ரத்ததான முகாம் !

தன்னார்வ அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் அரசு பள்ளியில் நடைபெற்றது.

Update: 2024-07-16 05:35 GMT

ரத்ததான முகாம் 

ஈரோடு அரிமா ரத்த வங்கி மற்றும் நம்ம பள்ளிபாளையம் அறக்கட்டளை சார்பில், பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி துவக்கப்பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளிபாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர்.முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்தவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.தற்போதைய காலகட்டத்தில், ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது மூன்று மாதத்திற்கு ஒரு முறை அனைவரும் ரத்ததானம் செய்தால், அவசர காலகட்டங்களில் ரத்தம் தாமதம் இன்றி தேவைப்படுவோருக்கு கிடைக்கும். இதன் மூலமாக பல்வேறு மனித உயிர்களை காப்பாற்றலாம். மனித உயிர்களைக் காக்கும் பொருட்டு ரத்ததான முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்தவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக அரிமா சங்க நிர்வாகிகள் ரத்தக் கொடையாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். காலை முதல் மதியம் வரை நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் ரத்ததானம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News