நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தான முகாம் !!
குமாரபாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-23 09:29 GMT
ரத்த தான முகாம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 இன எழுச்சி நாளையொட்டி நேற்று ரத்த தான முகாம் மாவட்ட தொகுதி செயலர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் நடந்த இந்த முகாமில் தலைமை டாக்டர் பாரதி பங்கேற்றார். இதில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட 60க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்தனர். மேலும் பாசம் ஆதரவற்றோர் மையத்தில் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி வழங்க, மையத்தின் நிர்வாகி குமார் பெற்றுகொண்டார். இதில் நகர பொறுப்பாளர்கள் ராவண பிரபு, பாலு,கதிரேசன், ஜெயபாலாஜி, வீராசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.