நெல்லையப்பர் கோவிலில் தெப்பத் திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அப்பர் தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-25 04:27 GMT

தெப்ப திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அப்பர் தெப்பத் திருவிழா நேற்று (பிப்.24) இரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. காந்திமதி அம்மன் சன்னதியில் அருகே உள்ள தாமரைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அப்பர் தெப்பத்தில் உலா வந்தார். தொடர்ந்து சுவாமி அம்பாள் அப்பருக்கு காட்சியளிக்கும் வைபவமும் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News