திருச்சி மாவட்டப் பகுதிகளில் வெடிகுண்டு சோதனை

மக்களவைத் தோ்தலை ஒட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீஸாா் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா்.

Update: 2024-04-08 02:05 GMT
மக்களவைத் தோ்தல் வரும் ஏப். 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட காவல்துறையின் வெடிகுண்டு துப்பறியும் மற்றும் அகற்றும் படையினா் மோப்பநாய் உதவியுடன், திருச்சி மாவட்டத்தில் சமயபுரம், லால்குடி, துறையூா், முசிறி, தொட்டியம், திருவெறும்பூா், மணப்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனா். வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குஇயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News