சிறுகனூரில் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் வெடிகுண்டு சோதனை

சிறுகனூரில் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையை மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடைப்பெற்றது.

Update: 2024-03-22 10:39 GMT

சிறுகனூரில் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையை மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடைப்பெற்றது.


திருச்சி மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.

அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி திமுக அரசின் சாதனைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக முதல்வரின் வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பட்டாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News