பெரம்பலூரில் நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா பெரம்பலூரில் உண்மைக்கு உயிரூட்டம்கொடு, நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-02-07 14:33 GMT

பெரம்பலூரில் உண்மைக்கு உயிரூட்டம்கொடு, நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது..... பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்றோர் நலச் சங்க கட்டிடத்தில் தமிழ்வழி கல்வி இயக்கம் சார்பில் கீழப்பெரம்பலூரை சேர்ந்த தர்மலிங்கம் எழுதிய உண்மைக்கு உயிரூட்டம் கொடு என்ற நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 7ம் தேதி ஓய்வுபெற்றோர் நலசங்க மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தர்மலிங்கம் உண்மைக்கு உயிரூட்டம் கொடு என்ற நூல் குறித்து விளக்கம் அளித்து பேசினார்கள் . மூடநம்பிக்கையை அகற்றி உண்மையில் நிலை அறிந்து வாழ்வதற்கான கருப்பொருளாக இந்நூல் அமைந்துள்ளது என பேசினார்கள், ஓய்வு பெற்றோர் நலச்சங்க செயலாளர் மருதமுத்து, பொருளாளர் ஆதிசிவம் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சாந்தப்பன், ஆதிமூலம், தேசிங்கு ராஜன். தர்மலிங்கம், பிரபாகரன், தமிழ் வழி கல்வி இயக்கத்தின் செயலர் தேனரசன், உள்ளிட்ட ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News