புதிய கிளை நூலகம் கட்ட பூமி பூஜை

கடலூர் மாவட்டம், சேப்பாக்கம் கிராமத்தில் புதிய கிளை நூலகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-03-10 07:42 GMT

நூலகம் கட்ட பூமி பூஜை 

கடலூர் மாவட்டம், சேப்பாக்கம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிளை நூலகம் கட்ட ஊராட்சி தலைவர் தெய்வானை தீனதயாளன் தலைமையில் பூமி பூஜை பணிகள் நடந்தது. இதில், கிளை நூலகர் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, துணைத் தலைவர் கட்டிமுத்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடாசலம், தனசேகரன், அரசு ஒப்பந்ததாரர் ஐவதுகுடி ராஜேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News