பிரதான குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர்

ஓரிக்கையில் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என, பலத்த கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-04-16 00:59 GMT

பிரதான குழாயில் உடைப்பு; ஓரிக்கையில் வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஓரிக்கை பாலாற்றாங்கரையில் இருந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு குடிநீர் வினியோகிக்க, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கையில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது.

இதனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், நீண்டநேரம் மின் மோட்டார் இயங்குவதால், மோட்டாரும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News