போட்டோ ஸ்டூடியோவை உடைத்து பணம் திருட்டு !
போட்டோ ஸ்டூடியோ பூட்டை உடைத்து ₹10,000 கொள்ளை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-26 11:46 GMT
பணம் திருட்டு
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி 3 -வது தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது 49). இவர் அரியமங்கலம் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஸ்டூடியோவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ஸ்டுடியோ கதவு உடைக்கப்பட்டு உள்ளிருந்த ரூ.10 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து உரிமையாளர் மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.