புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா

பாலக்கோடு அருள்மிகு ஸ்ரீ புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா கொண்டாட்டம்

Update: 2024-02-23 06:27 GMT

எருது விடும் விழா

பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர் பொன் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. 12 கிராமங்களை சேர்ந்த காளைகள் கலந்து கொண்டது. ஊர் வழக்கப்படி முதலில் கோ பூஜை செய்து அனைத்து காளைகளுக்கும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதனை அடுத்து ஊர் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பன்னிரண்டு கிராம காளைகள் பாய்ந்து வந்தன. காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளைகளை விரட்டி சென்றனர். இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டுக்களித்தனர் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .
Tags:    

Similar News