பள்ளி பெண் ஊழியர் வீட்டில் திருட்டு - 2 வாலிபர்கள் கைது

Update: 2023-12-17 08:05 GMT
அஸ்வின், பிரேமதாஸ்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் சுகாசினி (39).  தனியார் பள்ளியில் ஊழியராக உள்ளார். கணவருடன் விவாகரத்து ஆகி தனது வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.    கடந்த 6-ம் தேதி காலை மகனுடன் பள்ளியில் சென்ற சுகாசினி, மாலையில்  வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவுகள் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது.   இது குறித்து சுகாசினி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செம்பொன்விளை பகுதி சேர்ந்த பிரேமதாஸ் (24), மற்றும் மிடாலக்காடு பகுதி அஸ்வின் (20) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்தனர்.          விசாரணையில் இருவரும் சேர்ந்து சுகாசினி வீட்டு நகையை திருடியது  தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நகைகளையும்  மீட்டு, இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News