கோயம்பேடு மார்க்கெட்டில் வாகனங்களை எரித்த சம்பவம் - கூலி தொழிலாளி கைது

கோயம்பேடு மார்க்கெட் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவத்தில் கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-07-05 07:36 GMT

பழனிமுத்து

கோயம்பேடு மார்க்கெட் வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைத்திருந்த பேருந்து ,ஆட்டோக்கள், கார் என பத்து வாகனங்கள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலாகியது. இந்த தீ விபத்து தொடர்பாக கோயம்பேடு போலீசார் நடத்திய விசாரணைகள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிமுத்து 45 என்பவர் பேருந்தில் ஏறி தீ பற்ற வைத்தது தெரியவந்தது. கைது செய்த கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் விசாரணையில் பீடி புகைக்கு சென்றதாக முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதால் போலீசார் என்ன காரணத்திற்காக தீப்பற்ற வைத்தார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News