பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் சாலை கடக்க முயன்ற நபர் உயர் தப்பிய அதிர்ச்சி காட்சிகள்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியதால் அரசு பேருந்து ஓட்டுனர்க்கு பொதுமக்கள வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Update: 2023-10-17 14:07 GMT
busaccident
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியதால் அரசு பேருந்து ஓட்டுனர்க்கு பொதுமக்கள வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.நாமக்கல் மாவட்டம் வெப்படையிலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில், மக்கிரிபாளையம் அருகே , அரசு பேருந்து வருவதை கவனிக்காமல், செளதாபுரம் பிரிவிலிருந்து சைக்கிளில் வந்த நபர் சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் ஓட்டுனர், சைக்கிளில் வந்த நபர் மீது மோதாமல் இருக்க பேருந்தினை சாலையின் எதிர் திசையில் லாவகமாக திருப்பினார். இதனால் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பினார். மேலும் எதிர் திசையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

Similar News