பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவங்கியதால்,  மாற்றுப்பாதையில் பஸ்கள் திருப்பி விடப்பட்டன.

Update: 2023-12-24 16:39 GMT

குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவங்கியதால்,  மாற்றுப்பாதையில் பஸ்கள் திருப்பி விடப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்கள் சேதமானதால், அவற்றை அகற்றி, புதிய கட்டிடங்களாக மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சில நாட்களாக மேலே போடப்பட்ட சிமெண்ட் அட்டைகள் அகற்றப்பட்டன. நேற்று பஸ்கள் உள்ளே நுழையும் பகுதி அடைக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்கள் அனைத்தும்  டெம்போ ஸ்டாண்ட் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. பயணிகள் அந்த இடத்தில் இறங்கியும், ஏறியும் வந்தனர். பஸ் ஸ்டாண்ட் கடையினருக்கு தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள், டூரிஸ்ட் கார்கள் மாற்று இடத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி மார்க்கெட் சில நாட்கள் முன்பு, புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News