தங்க நகைகளை வாங்கி தலைமறைவு - வியாபாரி கைது.

கோவையில் தங்க கட்டியாக தருவதாக கூறி தங்க நகைகளை வாங்கி கொண்டு தலைமறைவான வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-09 11:56 GMT

பைல் படம் 

கோவை:பெரியகடை வீதியில் ஹெச்.எஸ் காஸ்டிங் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருபவர் ஸ்ரீதரன்(51).அதே பகுதியில் சிவசவுமா என்ற பெயரில் தங்க நகை கடை நடத்தி வரும் விஸ்வநாதன்-ஸ்ரீதரனும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தொழில் ரீதியான நண்பர்கள். தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வரும் விஸ்வநாதன் கடந்த மாதம் 29ம் தேதி 404 கிராம் 916 தங்க நகைளை ஸ்ரீதரனிடம் பெற்று கொண்டு தங்ககட்டிகளாக கொடுப்பதாக உறுதி அளித்து நகைகளை பெற்று சென்றுள்ளார்.

நகைகளை பெற்று கொண்டு தங்ககட்டிகள் திருப்பி தராமல் விஸ்வநாதன் காலம் தாழ்த்தி வந்த நிலையில் அவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அனைக்கபட்டிருப்பதை அடுத்து ஸ்ரீதரன் கடைக்கு சென்று பார்த்தபோது கடை பூட்டப்பட்டு இருப்பதை கண்டவர் இதுகுறித்து பெரியகடை வீதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News