கன்னியாகுமரியில் இன்று பிரச்சாரம் நிறைவு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்கள் மாலை 6:00 மணியுடன் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

Update: 2024-04-17 14:43 GMT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்கள் மாலை 6:00 மணியுடன் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்கள்  மாலை 6:00 மணியுடன் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இன்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். மாலையில் மேலமணக்குடி, கொட்டாரம், அஞ்சுகிராமம்  பகுதிகளில் பிரச்சாரம் செய்து, நாகர்கோவில் வந்து  டெரிக்  சந்திப்பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம் வழியாக சென்று வடசேரி அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

  பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஈசன்தங்கு பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ஆலங்கோட்டை, கணபதிபுரம் பகுதிகளுக்கு பிரச்சாரம் செய்கிறார். பிற்பகல் புத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து, நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் தனது பிரச்சாரத்தை மாலையில் நிறைவு செய்தார்

    அதிமுக வேட்பாளர் பசிலி யான்  நசரேத் தடிக்காரன்கோணம் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி, அழகிய பாண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து, பிற்பகல் பூதப்பாண்டியிலும் தொடர்ந்து மாலையில்  நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வேப்பமூடு சந்திப்பில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்

.

Tags:    

Similar News