செங்கம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

செங்கம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-14 13:57 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் நிலைய போலீசார் முறையாறு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News