மேலூரில் கார் - பைக் மோதல் : இரண்டு பேர் பலி

மேலூர் புறாக்கூடு மலை அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் பலியாகினர்.

Update: 2023-12-26 15:50 GMT

விபத்தில் சிக்கிய கார்

மதுரை மாவட்டம் மேலுார் அருகே உள்ள இ மலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயசீலன் மற்றும் பரத்.

இவர்களது உறவினர் மதுரை வண்டியூர் கார்த்திக். மூவரும் ஒரே டூவீலரில் இ.மலம்பட்டியில் நடந்த நாடகம் காண சென்றனர். பைக்கை ஜெயசீலன் ஓட்டினார்.

புறாக்கூடு மலை அருகே பைக் மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற காரும் நேருக்கு நேர் மோதின. இதில் டூவீலரில் பயணித்த ஜெயசீலன், கார்த்திக் பலியாகினர். பரத் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பைக் மோதிய வேகத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.பைக்  தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த 4 பேர் லேசான காயத்துடன் தப்பினர். கார் டிரைவர் புதுவயல் மோகன் 32, நண்பர் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகைக்காக மதுரையில் புதிய ஆடைகளை வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Tags:    

Similar News