டூவீலர் மீது கார் மோதி விபத்து - ஒருவர் படுகாயம் !

சோழியம்மாள் கோவில் ஆர்ச் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-07-08 10:35 GMT

கரூர்

சோழியம்மாள் கோவில் ஆர்ச் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் அடுத்த ஆத்தூர், நத்தமேடு, சரவணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் வயது 71. இவர் ஜூலை 5ஆம் தேதி காலை 10:15 மணியளவில், கரூர் - ஈரோடு சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது டூவீலர் சோழியம்மாள் கோவில் ஆர்ச் அருகே சென்றபோது, அதே சாலையில் டிஎன் 64 யு 7995 என்ற எண் கொண்ட கார், பழனியப்பன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பழனியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பழனியப்பனின் மகன் ரவி வயது 52 என்பவர், இது குறித்து அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல்துறையினர்.

Tags:    

Similar News