காரில் ரூ. 1 லட்சத்து  75 ஆயிரம் பணம் பறிமுதல்

நாகையில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரை நிறுத்தி  சோதனை செய்தனர். அந்த காரில்  ரூ. 1 லட்சத்து  75 ஆயிரம்  பணம் பறிமுதல்.

Update: 2024-03-29 05:17 GMT

 பணம் பறிமுதல்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ் சாலையில் கானூர் சோதனை சாவடியில் நேற்று தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் ரவி மற்றும் போலீசார்  வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது நாகையில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரை நிறுத்தி   சோதனை செய்தனர். அந்த காரில்  ரூ. 1 லட்சத்து  75 ஆயிரம்  பணம் இருந்தது  . அதிகாரிகள் குழு   விசாரணை மேற்கொண்ட போது காரில் வந்தவர் நாகை மருந்து கொத்தள தெருவை சேர்ந்த புவனேஸ்வரி   என்பது தெரியவந்தது. மேலும்   அதற்கு உரிய  ஆவணங்கள் இல்லாததால்  பணத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் ரூ. 1 லட்சத்து  75 ஆயிரம் பணத்தை கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்  கவிதாஸ்   இடம்  ஒப்படைத்தனர். இந்த பணத்தை  கீழ்வேளூர்  சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News