சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலை

சிவகாசி: சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-05-24 16:13 GMT
கோப்பு படம்

 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சார்ந்தவர் பாண்டியம்மாள் இவர் விருதுநகர் அருகே சொக்கலிங்கபுரத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது இவருடைய பட்டாசு ஆளையில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஆய்வின் பொழுது விதிமிரலில் இருந்ததாக தெரியவந்தது.

இதை தொடர்ந்.அந்த ஆலையின் உரிமம் மாவட்ட வருவாய் அலுவலரால் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த பட்டாசு ஆலை ரகசியமாக செயல்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் சகாயராஜ் ஜீவன் என்பவருக்கு தகவல் கிடைத்தது அங்கு சோதனை செய்ததில் அந்த பட்டாசு ஆலை இரகசியமாக இயங்கியது தெரியவந்தது இதை எடுத்து பாண்டியம்மாள் மீது கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரியின் அடிப்படையில் வச்ச காரப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News