காமராஜபுரம் பகுதியில் பெண் மீது வழக்கு

காமராஜபுரம் பகுதியில் பெண்ணிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்

Update: 2024-05-30 06:50 GMT

பைல் படம்

தேனி அருகே உள்ள வீரபாண்டி காவல்துறையினர் நேற்று ரோந்து பணி சென்றபோது காமராஜபுரம் ரைஸ் மில் தெருவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரித்தனர். விசாரித்ததில் அமராவதி என்பது தெரிய வந்தது மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்த காவல்துறையினர் அமராவதி மீது வழக்கு பதிவு செய்தனர்
Tags:    

Similar News