காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து தந்தை- மகன் மீது வழக்கு

சேலம் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து தந்தை- மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Update: 2024-06-19 04:49 GMT

வழக்கு 

சேலம் ஜாகீர் அம்மபாபாளையம் பகுதியை சேர்ந்த அழகிரிசாமி என்பவரும், சூரமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து ததிருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு அழகிரிசாமியின் நண்பர் முல்லை நகரைச் சேர்ந்த சங்கர் (வயது 25) உடந்தையாக இருந்துள்ளார். இந்த காதல் திருமணம் தொடர்பாக நேற்று முன்தினம் சங்கரிடம், பெண்ணின் தந்தை சிராஜ், அவருடைய மகன் அப்துல்லா இருவரும் தட்டிக் கேட்டுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் சங்கருக்கு கத்திக்குத்து விழுந்ததாக தெரிகிறது. காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சங்கர் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக சிராஜ், அவருடைய மகன் அப்துல்லா இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News