சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா

நாகலூர் கிராமத்தில் அமைந்துள்ள சௌந்தராஜா பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா மேள தாளங்களுடன் சாமி ஊர்வலம் ஊர்வலம் சிறப்பு அபிஷேக பூஜைகளுடன் யாகசாலை பூஜை நடந்தது.

Update: 2024-02-22 10:46 GMT

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்கள் 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எருமைப்பட்டி நாகலூர் கிராமத்தில் அமைந்துள்ள சௌந்தராஜா பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா எருமைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மேள தாளங்களுடன் சாமி ஊர்வலம் ஊர்வலம் சிறப்பு அபிஷேக பூஜைகளுடன் யாகசாலை பூஜை நடந்தது.

மேலும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது ராஜேந்திரன்,மற்றும் ஊர் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News