மகளிர் தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-08 15:13 GMT

 நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சியில் பணிபுரியும் மூத்த தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலா குமார் பொன்னாடை அணிவித்து அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அலுவலக வளாகத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு மியூசிக் சேர் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக அனைத்து தூய்மைப்பணியாளர்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றன. இந்த மகளிர் தின விழாவிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், தனம் உட்பட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News