மகளிர் தின விழா கொண்டாட்டம்

திம்மணநல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தலைமையில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடந்தது.

Update: 2024-03-09 05:40 GMT

 திம்மணநல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தலைமையில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடந்தது.  

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ஊராட்சியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மராஜன் தலைமை தாங்கினார்.கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு சீருடை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் வெற்றிவேந்தன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.இதில் தூய்மை பணியாளர்கள்,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News