சித்திரை தேர் திருவிழா; நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் சென்னகேசவபெருமாள்

சங்ககிரி சென்னகேசவபெருமாள் கோவிலில் சித்திரை தேர் திருவிழா சுவாமி நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2024-04-19 15:30 GMT

 சங்ககிரி சென்னகேசவபெருமாள் கோவிலில் சித்திரை தேர் திருவிழா சுவாமி நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி சித்திரைத் தேர்திருவிழா 5வது நாளையொட்டி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உற்சவமூர்த்தி நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் இரவு வீதி உலா வந்தார். சித்திரைத் தேர்திருவிழா 5வது நாளையொட்டி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் ஆஞ்சநேயர் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக,அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.

அதனையடுத்து இரவு அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உற்சவமூர்த்திக்கு நவநீதகிருஷ்ணன் அலங்காரம் செய்யப்பட்டு சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். கட்டளை தாரர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News