பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-10 17:08 GMT
மாணவர்கள் உற்சாகம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி நுழைவு வாயிலில் இருந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாணவர்களை வரவேற்று, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர். மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.