சோழபுரம் பேரூராட்சியில் "மக்களுடன் முதல்வர் திட்டம்".

பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சியில் "மக்களுடன் முதல்வர் திட்டம்". நடைபெற்றது.

Update: 2023-12-27 05:58 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில் "மக்களுடன் முதல்வர் திட்ட" முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பேரூராட்சிக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், தங்கள் பிரச்சனைகள் குறித்த விபரங்களை மனுக்களாக அளித்தனர். இந்த முகாமில் பங்கேற்ற அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களை பதிவேற்றம் செய்து அவர்களுக்கு மனு ரசீது அளித்தனர். இந்த முகாமில் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி தலைவர் சௌந்தரப்ரியா, செயல் அலுவலர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டு, பொதுமக்கள் மனுக்களை அளிப்பதற்கு, ஏற்பட்ட சந்தேகங்களை தீர்த்து வைத்து, துறை ரீதியான அதிகாரிகளிடம் அந்த மனுக்களை அளிக்க உதவி புரிந்தனர்.
Tags:    

Similar News