ஆலப்பாக்கத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்

ஆலப்பாக்கம் சென்னை மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் முகாமை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி துவக்கி வைத்தார்.

Update: 2024-01-19 07:47 GMT

மக்களுடன் முதல்வர் முகாம் 

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-147, மதுரவாயல் ஆலப்பாக்கம் சென்னை மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்து பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் சம்மந்தப்பட்ட துறையினரிடம் உரிய முறையில் பரிசீலனை செய்து உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து சேவைகளை பயனாளிகளுக்கு வழங்கினர். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன். மாமன்ற உறுப்பினர் ரமணிமாதவன், திமுக வட்டச் செயலாளர் மாதவன் மாவட்ட பிரதிநிதி க. பிருந்தாவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News