செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

வேலூர் மாவட்டம் செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டம் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2023-12-18 15:16 GMT

மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலூர் மாவட்டம் செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. திட்டத்தை துவக்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மக்களுடன் முதல்வர் திட்டம் முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டு இன்று காட்பாடி செங்குட்டை பகுதியில் 5 வார்டுகளை ஒருங்கிணைத்து முதல் திட்ட நிகழ்ச்சியாகபநடத்தப்படுகிறது. தொடர்ந்து 2வார்டுகள் என 30 இடங்களில் 30 இடங்களில் தொடர்ந்து நடைபெறும்.

இதன் மூலம் மனுக்கள் பெறப்பட்டு குடிநீர் மின் வாரியம் வருவாய்துறை உள்ளிட்ட 14 துறைகள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு அதிகாரிகள் பரிசீலனை செய்து ஒரு மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் குறை தீர்க்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மாவட்ட முழுதும் இந்த திட்டமானது 10 இடங்களில் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News