சீட்டு நடத்தி மோசடி - வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சேலம் பழைய சூரமங்கலத்தில் ஏல சீட்டு நடத்தி மோசடி செய்தவர்களின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-02 08:46 GMT

வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் 

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த தேன்மொழி, நாகராஜ், காஞ்சனா, பிரியதர்ஷினி ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் சேலம் சூரமங்கலம், பழைய சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சீட்டில் சேர்ந்து பணம் கட்டினர். ஆனால் ஏல சீட்டு முடிந்தும் 4 பேரும் பொதுமக்களிடம் வசூலித்த தொகையை திருப்பி தராமல் 3 ஆண்டுகளாக ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பணம் கட்டி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று பழைய சூரமங்கலத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News