மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா

மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

Update: 2024-04-11 12:29 GMT

மங்கலதேவி கண்ணகி கோவில்

கம்பம் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,வரும் 23ம் தேதி மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த ஆண்டுகளைப்போல் இவ்வாண்டு விழாவுக்கு நாளை 12.4.2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் கூடலூர் பளியன்குடியில் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் வருவாய்துறை, காவல்துறை, வனத்துறை, அறநிலையத்துறை, மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். எனவே அனைவரும் தவறாது குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News